<p><b>தூத்துக்குடி அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</b></p><p>தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் கூட்டுறவு வங்கி தெருவை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 26). இவர் சரிவர வருமானம் இல்லாததால், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு உள்ளார்.&nbsp;</p><p>இதில் மனம் உடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>