ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன்: ஒபாமா நெகிழ்ச்சி!
நிருபர்
November 17, 2020
I grew up listening to the Ramayana, the Mahabharata: Obama Flexibility
<p><b>தனது சிறு வயதில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்து புராணங்களை கேட்டு வளர்ந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.</b></p><p>அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ‘A Promising Land' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இந்தியாவின் மிகப்பெரிய பரப்பளவில் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கினர் வாழ்கின்றனர். சுமார் 2000 தனி இனக்குழுக்கள் வாழும் இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.<br></p><p>2010ஆம் ஆண்டு அரசு பயணமாக இந்தியா வருவதற்கு முன்பு ஒரு முறை கூட நான் அங்கு சென்றதில்லை. ஆனால், எப்போதும் என் மனதில் இந்தியாவுக்கு சிறப்பு இடமுண்டு. ஏனென்றால், இந்தோனேசியாவில் நான் சிறு வயதில் வளர்ந்தபோது ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்து பிராணங்களை கேட்டு வளர்ந்தேன்.<br></p><p>மேலும், கிழக்கு உலக மதங்களின் மீது எனக்கு ஆர்வமுண்டு. அதுபோக, எனது இந்திய மற்றும் பாகிஸ்தானிய கல்லூரி நண்பர்களால் நான் தால் மற்றும் கீமா சமைக்க கற்றுக்கொண்டேன். அவர்களால்தான் பாலிவுட் திரைப்படங்களையும் பார்த்தேன்” என்று தெரிவித்துள்ளார்.<br></p><p>2008ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சாரம் முதல், பாகிஸ்தானில் அபோத்தாபாத்தில் ஒசாமா பின் லேடனை கொன்ற ரெய்டு வரை பல்வேறு விஷயங்களை பற்றி ஒபாமா தனது புத்தகத்தில் நினைவுக் குறிப்புகளாக பதிவிட்டுள்ளார். இப்புத்தகத்தின் முதல் பாகம் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ளது<br></p>