<p><b>ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.</b></p><p>ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் மாயகிருஷ்ணன் (20) என்பவருக்கும் குலசேகரநல்லூர் நடு தெருவைச் சேர்ந்த எட்டப்பன் மகன் முத்துமாரியப்பன் (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.</p><p>இந்த முன்விரோதம் காரணமாக இன்று (20.03.2022) மாயகிருஷ்ணன் அவரது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த முத்துமாரியப்பன் மற்றும் அவரது நண்பரான ஓசனுத்து பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வகுமார் (28) உட்பட 4 பேர் சேர்ந்து மாயகிருஷ்ணனிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இதுகுறித்து&nbsp; மாயகிருஷ்ணனின் மனைவி அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சித்ரகலா வழக்குப்பதிவு செய்து மேற்படி&nbsp; செல்வகுமார் என்பவரை கைது அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தையும் (TN67M9140 Splendor) பறிமுதல் செய்தார்.</p><p>மேலும் இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>