ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சால் திமுக உருவபொம்மையை எரித்து போராட்டம்..!
நிருபர்
December 07, 2020
ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சால் திமுக உருவபொம்மையை எரித்து போராட்டம்..!
<p><b>மு.க.ஸ்டாலினை இழிவுபடுத்தும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் பேசியதாகக் குற்றம்சாட்டி, ராஜேந்திரபாலாஜி உருவபொம்மையை எரிக்க முயற்சி, மோதலை தடுக்க போலீசார் தடியடி விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம்</b><br></p><p>விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசியபோது, ஒருமையில் கடுமையாக சாடினார்.<br></p><p>இதைக் கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.</p><p>மேலும் ராஜேந்திர பாலாஜி உருவ பொம்மையை எரிக்க திமுகவினர் முயற்சி செய்தபோது, போலீசார் அதைத் தடுத்து உருவ பொம்மையை பறிக்க முற்பட்டதால் மோதல் உருவானது.</p><p>உருவபொம்மையை பிடுங்க இருதரப்பும் இழுபறியில் ஈடுபட்டிருந்தபோது அதன் மீது ஒருவர் பெட்ரோல் ஊற்றினார். பின்னர் போலீசார் அதன் மீது தண்ணீர் ஊற்றினர். <br></p><p>தள்ளுமுள்ளு, வாக்குவாதம், மோதலை தொடர்ந்து திமுகவினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த திடீர் போராட்டத்தால் மதுரை - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. <br></p><p>இதனிடையே திமுகவினரை கண்டித்து அதிமுகவினர் மறியலில் இறங்கியதால், அவர்களையும் போலீசார் கலைந்துபோகச் செய்தனர்.<br></p>