<p><b>தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.</b></p><p>கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு, தேர்தலை தள்ளிவைக்க முடியாது. கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் கூறியது.இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p><b>இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் :</b></p><p>''சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 641 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும். ஜனவரி 28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும்.</p><p>மனுதாக்கல் செய்ய பிப்ரவரி 4 இறுதிநாள். பிப்வரி 5ம்தேதி வேட்பு மனு பரிசீலனை. வேட்பு மனுவை திரும்ப பெற பிப்ரவரி 7ம்தேதி கடைசி நாள். பிப்ரவரி 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந் தேதி நடைபெறும்” என்று தெரிவித்தார்.80,000 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர். ஒரு வாக்கு சாவடிக்கு 4 பேர் வீதம், 1.33 லட்சம் தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுவர். சொத்து, குற்றவியல் விபரம் போன்றவற்றை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் முடிந்த 30 நாட்களில் தேர்தல் செலவினங்களை தாக்கல் செய்ய வேண்டும்.</p><p><b>வேட்பு மனு வைப்பு தொகை&nbsp;</b></p><p>ஆதி திராவிடர் பழங்குடி - பேரூராட்சி ரூபாய் 500</p><p>நகராட்சி ரூபாய் 1000</p><p>மாநகராட்சி ரூபாய் 2000</p><p><b>மற்றவர்</b></p><p>பேரூராட்சி ரூபாய் 100</p><p>நகராட்சி ரூபாய் 2000</p><p>மாநகராட்சி ரூபாய் 4000</p><p><b>செலவீனம்</b></p><p>பேரூராட்சி - 17,000</p><p>முதல் நிலை பேரூராட்சி \ நகராட்சி - 34,000</p><p>மாநகராட்சி - 85,000</p><p>சென்னை மாநகராட்சி - 90,000</p><p><b>மறைமுக தேர்தல்</b></p><p>மேயர் - 21</p><p>நகராட்சி - 138</p><p>பேரூராட்சி - 490</p><p>மொத்தம் - 1298</p>