<p><b>மார்கழி மாத பிறப்பையொட்டி தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள *"ஸ்ரீ வரத விநாயகர்"* கோவிலில் அதிகாலையில் பஜனை பாடல்களுடன் வழிபாடு நடைபெற்று வருகிறது.</b></p><p>இந்தநிலையில்,&nbsp; சனிக்கிழமையான இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வரத விநாயகர் பஜனை குழுவைச் சேர்ந்த பக்தர்கள் மார்கழி மாத பக்தி பாடல்களை பாடியவாறு தெருவை சுற்றி உலா&nbsp; வந்து, கடவுளின் நாமங்களைச் சொல்லி சிறப்பு பஜனை பாடப்பட்டது. அதனையடுத்து, கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.</p><p>பொதுமக்கள், பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள்,பெண்கள், சிறுவர் சிறுமியர் உட்பட பலர் இதில் கலந்து கொண்டு பஜனை பாடல் பாடி&nbsp; இறைவழிபாடு செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.</p>