<p><b>தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மண்டலங்களில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.</b></p><p><br></p><p>இது குறித்து மாநகர சுகாதாரத் துறையினர் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி தெரு நாய் தொல்லைகளில் இருந்து பொது மக்களை காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாநகராட்சி மேயர் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.</p><p><br></p><p>இந்த நிலையில், தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களுக்கு 18002030401 என்ற கட்டணமில்லாத எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார்.</p>