<p dir="ltr"><span style="font-size: 16px;"><b>எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷானின் படு கொலைக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</b></span><br></p><p> </p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இது குறித்து <b>காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</b></span></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள மண்ணஞ்சேரி என்ற&nbsp; பகுதியில் ஷான் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது காரைப் பயன்படுத்தி திட்ட மிட்டு மோதி கீழே தள்ளி, சமூக விரோதி கும்பல்கள்&nbsp; பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் ஷான் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது .</span></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">ஷான் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் . எஸ் டி பி ஐ கட்சியினருக்கும்&nbsp; ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறோம். பரிதாபமாக உயிரிழந்துள்ள ஷான் குடும்பத்திற்கு இழப்பிடு ரூ 1 கோடி கேரளா அரசு வழங்க வேண்டும். மேலும் ஷான் குடும்பத்தில் ஓருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது&nbsp; .</span></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">கேரளாவில் கடந்த மாதம் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் படுகொலை நேற்று எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயலாளர் ஷான் படுகொலை செய்ய பட்டுள்ளார் இது போன்ற முக்கிய அரசியல் பிரமகர்களை படு கொலை செய்வதற்கு திட்டம் திட்டி நிகழ்த்தி வரும் சமூக விரோதி கும்பலை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது . ஆகவே இது போன்ற படு கொலைகளை நிகழ்த்தி கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என கேரளா அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது .&nbsp; </span><br> <span style="font-size:16px" ;="">எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயலாளர் ஷான் என்பவரை கொடூரமாக படு கொலை செய்த சமூக விரோதி கும்பல் மீது எந்த வித பாரம் பட்சம் பாராமல்&nbsp; உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்ட ரீதியாக கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க பட வேண்டும். </span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">மேலும் இது போன்ற கொடூர சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை&nbsp; நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என கேரளா முதல்வர் பிரணாய் விஜயன் அவர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .</span></p>