<p dir="ltr"><span style="font-size: 16px;"><b>நெல்லையில், பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயமடைந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.</b></span><br></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. அதில், சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.</span><br> <span style="font-size:16px" ;="">ஒரு மாணவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;=""> இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இவர்கள் தவிர சஞ்சய், இசக்கி பிரகாஷ், ஷேக் அபுபக்கர், அப்துல்லா ஆகிய 4 மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.</span></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">இந்நிலையில், இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயமடைந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.</span></p>