<p><b>முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான ஜூடோ போட்டி தூத்துக்குடி மாணவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்</b>.</p><p>முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான ஜூடோ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது..<br></p><p>இப்போட்டிகளில், ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பாக 7 மாணவர்களும் 7 மாணவிகள் என மொத்தம் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.<br></p><p>இதில், தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் 60கிகி உட்பட்ட எடை பிரிவில் ஆகாஷ்ராஜ் தங்கப்பதக்கமும் திலிப் வெண்கலப் பதக்கமும் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.<br></p><p>மேலும், தமிழக அரசின் ரொக்க பரிசு தங்கப் பதக்கத்திற்கு ரூபாய் 1 லட்சமும் வெண்கலப் பதக்கத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.<br></p><p>வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர் சுரேஷ் குமார், தமிழ்நாடு ஜூடோ சங்க தலைவர் விஜயமோகன முரளி, பொது செயலாளர் முரளி, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக் வின்சென்ட், தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்&nbsp; பால்சாமி, தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் ஜூடோ சங்கத்தின் தலைவர் மாணிக்கராஜ், செயலாளர் ராமலிங்க பாரதி, பொருளாளர் முத்து சங்கர், குமார் ஆகியோர்&nbsp; பாராட்டினார்கள்..<br></p>