நீட் தேர்வு, குடியுரிமை சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் - ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ்!
நிருபர்
November 20, 2021
நீட் தேர்வு, குடியுரிமை சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும்_ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ்
<p><b>உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது</b>.</p><p>வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.<br></p><p>அதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் தலைமையில் தூத்துக்குடியில் உள்ள பானு பிருந்தாவன் ஹோட்டலில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.<br></p><p>அதனைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் TCTU சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் நடைபெற்றது.<br></p><p>அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டத்தையும் ரத்து செய்திருப்பது பல்வேறு நாட்களாக வேளாண்குடி மக்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தியதன் காரணமாக ரத்து செய்திருக்கிறார்..<br></p><p>இப்போராட்டத்தில் விவசாயிகளுக்கு தோளோடு தோள் கொடுத்தவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதன் முறையாக 3 வேளாண் சட்டத்தை எதிர்த்தவர் ராகுல் காந்தி அவர்கள்<br></p><p>இச்சட்டத்தை ரத்து செய்ய 720 உயிர் பலி ஆகியுறுக்கிறது. அது போல வேளாண் குடி மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.</p><p>அது மட்டுமல்ல நீட் தேர்வு, குடியுரிமை சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என கூறினார்.<br></p><div><br></div>