<p><b>தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தெரிவித்தார்</b>.&nbsp;</p><p>தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக சாருஸ்ரீ இன்று ( 19.6.2021 ) காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.<br></p><p>பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் :<br></p><p>"தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சிப் பணி கொரோனா தடுப்புப் பணி, நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்திலும் கவனம் செலுத்தப்படும். மாநகராட்சியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவது ஒரு சவாலான விஷயமாக இருந்து வருகிறது. அதற்கு தீர்வு காண்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p> மழை வருவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன அதற்கு முன்பாக மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.&nbsp;&nbsp;<br></p><p>மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ,&nbsp; 2015ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ்&nbsp; அதிகாரியாக தேர்வானவர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் உதவி ஆட்சியராக பணியாற்றிய அவர் தொடர்ந்து சென்னை வணிகவரித் துறையில் அதிக வரி செலுத்துவோர் பிரிவில் இணை ஆணையராக பதவி வகித்தார். அதனை தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாநகராட்சி 20ஆவது ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். </p><p>புதிய மாநகராட்சி ஆணையருக்கு மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மகனி, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் வித்யா, உதவி ஆணையர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.<br></p>