• vilasalnews@gmail.com

கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் இடைவெளி காரணம் என்ன?

  • Share on

சோதனை தரவுகளின் அடிப்படையில் முதலில் கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளி நான்கு வாரங்கள் ஆகவும், அதன் பிறகு கூடுதலாக கிடைத்த அறிவியல் மற்றும் ஆய்வக தரவுகளின் அடிப்படையில் எட்டு வாரங்களாக நீட்டிக்கப்பட்டது.

இடைவெளி நான்கு வாரங்களாக இருந்தால் தடுப்பூசியின் திறன் 57 விழுக்காடாகவும், எட்டு வாரங்களாக இருந்தால் 60 விழுக்காடாகவும் இருக்கும் என்ற தரவுகளின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்தார்.

அதன் பின், பிரிட்டனில் உள்ள நடைமுறை ஆதாரங்களை பின்பற்றி இந்த குழுவின் ஏகமனதான பரிந்துரையின் பேரில் இடைவெளியானது 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது. அதில் நிபுணர்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை என்று அறிவித்தாலும், இது இப்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 தடுப்பூசி டோஸ்களுக்கான இடைவெளி என்பது முக்கியமானதாகும். ஏனென்றால் முதல் டோஸ் போட்டவுடன் உடலில் ஆன்ட்டி பாடீஸ் எனும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. இரண்டாவது டோஸ் அதை வலுப்படுத்துகிறது. இரண்டாவது டோஸ் தள்ளிப் போனால் முதல் டோஸ் செயல்படுவதற்கான அவகாசம் கிடைக்கும். எனவே பிரிட்டன் தனது தடுப்பூசி திட்டத்தை தொடங்கும்போதே இடைவெளியை 12 வாரங்களாக நிச்சயித்து  விட்டது.

இந்த நிலையில், இந்தியா 12 முதல் 16 வாரங்களாக இடைவெளியை அதிகரித்த, இரண்டு மூன்று நாட்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், கோவிஷீல்ட் 33 சதவீத பாதுகாப்பு மட்டுமே தரப்படுவதாக கூறப்படுகிறது.

எதிர்பார்த்தபடி 65 முதல் 85 விழுக்காடு பாதுகாப்பை தராததால் பல நாடுகளில் இந்த இடைவெளியை குறைத்து வருகின்றனர். இந்தியாவிலும் அது குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் மக்களின் பாதுகாப்பை கருதி மட்டுமே இந்திய அரசு எந்த முடிவையும் எடுக்கும் என்றும், இடைவெளியை குறைத்தால் மக்களுக்கு நல்லது என்று நாளையே தெரியவருமானால் இடைவெளியைக் குறைக்க அரசு முன்வரும். இல்லை என்றால் இப்போது இருக்கும் இடைவெளியே தொடரும் என்று டாக்டர் அரோரா தெரிவித்துள்ளார்.


  • Share on

கருப்பு பூஞ்சை : அறிகுறி! செய்ய வேண்டியவை! செய்யக்கூடாதவை!

நீங்கள் பிளாக் டீ குடிப்பவரா? அதனால் ஏற்படும் விளைவுகள் தெரியுமா?

  • Share on