<div align="left"><p dir="ltr"><b>புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் மதுக்கடைகள் திறக்கப்பட்டதையடுத்து அங்கு ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளது.</b><br></p> </div><div align="left"><p dir="ltr">புதுச்சேரியில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மதுபான கடைகள் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், 42 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டதால், மதுப்பிரியர்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக கானப்பட்டு, கடைகள் முன் வரிசை கட்ட ஆரம்பித் தனர். இதனால் மதுக்கடைகளில் விற்பனையும் அதிகமாக இருந்தது. </p> <p dir="ltr">வழக்கமாக ஒரு நாளில் புதுச்சேரியில் மாநிலம் முழுவதும் சுமார் ரூ.4 கோடிக்கு மதுபானம் விற்பனையாகும். ஆனால், நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.</p> <p dir="ltr">இதனால் மதுவிற்பனையாளர்களும் குஷி,&nbsp; காத்திருப்பில் கிடந்த மதுபிரியர்களுக்கு கையில் மதுபானங்கள் கிடைக்கப்பெற்றதால் அவர்களும் குஷியானர்.</p></div>