விளாத்திகுளம் அருகே ஊரடங்கு விதிகளை மீறி கோவில் திருவிழா நடத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை!
நிருபர்
June 08, 2021
விளாத்திகுளம் அருகே ஊரடங்கு விதிகளை மீறி கோவில் திருவிழா நடத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை!
<p dir="ltr"><b>விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஊரடங்கு விதிகளை மீறி கோவில் திருவிழா நடத்தியவர்<u>கள் மீது </u>காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.</b><br></p><p dir="ltr">கொரோனா இரண்டாவது அலை இன்னும் குறையாத நிலையில், மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை யடுத்த நாகலாபுரம் கிராமத்தில், அனுமதியின்றி காளியம்மன் கோவில் திருவிழாவை அக்கிராம மக்கள் நடத்தியிருக் கின்றனர்.</p><p dir="ltr">மேலும், திருவிழாவையொட்டி கபாடி போட்டி, கயிறு இழுக்கும் போட்டிகளையும் அவர்கள் நடத்தியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.</p><p>
</p><p dir="ltr">இதனையடுத்து, இது குறித்து விசாரனை மேற்கொண்ட காவல்துறையினர், ஊரடங்கு விதிமுறைகளை மீறி எந்தவொரு பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், கொரோனா தொற்றை பரப்பும் விதத்தில் அனுமதியின்றி ஊர் திருவிழாவை நடத்தியதற்காக 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.</p>