<p><b>தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சூழவாய்க்கால் கிளை சார்பில்&nbsp; கொரோனா பேரிடர் காலத்தில் நோயாளிகள் பயன்பெறும் வகையில் ரத்ததான முகாம்&nbsp; சூழவாய்க்கால் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.&nbsp;</b><br></p><p>முகாமிற்கு, மாவட்ட துணைத்தலைவர் தமீம் அன்சாரி தலைமை வகித்தார். கிளை பொருளாளர் இம்ரான் வரவேற்றார்.&nbsp; ஏரல் சப்-இன்ஸ்பெக்டர்&nbsp; ராஜாமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் இஸ்லாமியர்களின் தன்னார்வமிக்க தொண்டுகளையும், கொரோனா&nbsp; பாதிப்பினால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்து வரும் செயலையும்&nbsp; பாராட்டினார்.&nbsp;</p><p>தூத்துக்குடி அரசு பொதுமருத்துவமனை ரத்தப் பிரிவு மருத்துவர் சாந்தி ரத்ததானத்தின் அவசியத்தையும், அன்றாடம் தேவைப்படுகிற ரத்த தேவையையும் கூறி கொரோனா&nbsp; நோயாளிகளை பராமரிப்பதின் மூலம் நாளும் அடைகிற மன அழுத்தத்தையும் எடுத்து சொல்லி அறிவுரை வழங்கினார்.</p><p>இதில், மாவட்ட துணை செயலாளர்கள் சிக்கந்தர், இமாம்பரீத், மருத்துவர் அணி செயலாளர் ரசீத் காமில், சூழவாய்க்கால் கிளைத்தலைவர் கஸ்ஸாலி, துணைத்தலைவர் பாஸித், துணை செயலாளர் ஜாவித் மற்றும்&nbsp; ரியாஜ் ஸலாஹுத்தீன், இஜாஸ்,&nbsp; நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.</p><p>முகாமில், சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் வேங்கையன் மற்றும் ஊர் பொதுமக்கள் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு ரத்ததானம்&nbsp; செய்தனர்.</p>