கொரோனா தொற்றால் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினர் அனைவருக்கும் ஓய்வூதிய தொகை – மத்திய அரசு
நிருபர்
May 31, 2021
கொரோனா தொற்றால் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினர் அனைவருக்கும் ஓய்வூதிய தொகை – மத்திய அரசு
<p dir="ltr"><b>மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களின் காப்பீட்டுக் கழக கணக்கில் இருந்து (இ.எஸ்.ஐ.சி.) அவர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.</b><br></p><div align="left">
<p dir="ltr">கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் அந்த ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழந்த தொழிலாளரை சார்ந்துள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் ஓய்வூதிய தொகை வழங்கப்படும். அதற்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.</p>
<p dir="ltr">கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ.சி. வலைதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினரின் விவரங்களையும் அவர் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அத்தொழிலாளர் இ.எஸ்.ஐ.சி. கணக்கில் குறைந்த பட்சம் 78 நாட்களுக்கு வரவு வைத்திருக்க வேண்டும். </p>
<p dir="ltr">நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த தொழிலாளர்கள் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தால், அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு தினசரி ஊதியத்தில் சுமார் 90 சதவீதமானது ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது<br>
</p>
</div><p>
</p><p dir="ltr"><br>
</p>