<p><b>தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த வாலிபரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.&nbsp;</b><br></p><p>தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் கடலோர காவல் உதவி ஆய்வாளர்&nbsp; முத்துமாரி தேவேந்திரன் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த முகமது நபிக் மகன் சேக்&nbsp; மைதீன் என்கிற சித்திக் (28) என்பவரை கைது செய்தனர். </p><p>அவரிடம் இருந்து 50 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப் பட்டது. இது தொடர்பாக மேலும் 2பேர் தேடி வருகின்றனர்.&nbsp;</p><p><br></p>