விளாத்திகுளத்தில் பொதுமக்களுக்கு இலவச கபசுரக் குடிநீர் வழங்கல்!
நிருபர்
May 13, 2021
விளாத்திகுளத்தில் பொதுமக்களுக்கு இலவச கபசுரக் குடிநீர் வழங்கல்!
<p><b>விளாத்திகுளம் சமூக ஆர்வலர்கள் சார்பாக, பொதுமக்களுக்கு இலவச கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.</b><br></p><p>விளாத்திகுளம் சமூக ஆர்வலர்கள் சார்பாக அதன் தலைவர் சேர்மன் தலைமையில் பொதுமக்களுக்கு இலவச முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில், விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.</p><p>அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு வாழ்வியல் கருத்துக்களை விளக்கிப் பேசி நோய்த்தொற்று எல்லா சுகவாழ்வு வாழ்வதற்கான சிறப்பு ஆலோசனையும் வழங்கப்பட்டது.</p><p>இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் விநாயகம் பாஸ்டர் மோகன், மேல்மாந்தை கிருஷ்ணன், முன்னாள் வர்த்தக சங்க மூத்த தலைவர் பொன்னுசாமி பிள்ளை, வர்த்தக சங்க தலைவர் கனகவேல், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தம்பிதுரை, என். வேடபட்டி விஜய பாண்டி, ஞானராஜ், வள்ளிமுத்து, மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு</p>