<p><b>தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான அமைச்சரவையில், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.</b></p><p><br></p><p>இதில் நிர்வாக ரீதியாகவும், மக்கள் நலன் சார்ந்தும் மிக முக்கியத்துவம் வாய்ந்த 17 துறைகளை முதல்வர் விஜய் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.</p><p><br></p><p>கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். கூட்டணி கட்சிகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் இலாகா பகிர்வு குறித்த தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு, தற்போது துறைகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.</p><p><br></p><p><b>முதல்வர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய துறைகள்:</b></p><p><br></p><p><b><font color="#ce0000">பொது நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு:</font></b></p><p>பொதுத்துறை (Public Department)</p><p>பொது நிர்வாகம் (General Administration)</p><p>ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் (IAS, IPS, IFS) அதிகாரிகள் சார்ந்த நிர்வாகம்</p><p>மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DROs) நிர்வாகம்</p><p>காவல்துறை மற்றும் உள்துறை (Home Department)</p><p><br></p><p><b><font color="#397b21">சமூக நலம் மற்றும் மக்கள் மேம்பாடு:</font></b></p><p>மகளிர் நலம் மற்றும் பாதுகாப்பு</p><p>இளைஞர் நலன் மற்றும் மேம்பாடு</p><p>குழந்தைகள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை</p><p><br></p><p><b><font color="#7b3900">உள்ளாட்சி மற்றும் கட்டமைப்பு:</font></b></p><p>நகராட்சி நிர்வாகம்</p><p>நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை</p><p>சிறப்புத் திட்டச் செயலாக்கம் (Special Programme Implementation):</p><p>அரசின் முன்னோடித் திட்டங்கள் மற்றும் சிறப்பு அறிவிப்புகளை ஒருங்கிணைத்து, அவை தொய்வின்றி நடப்பதை நேரடியாகக் கண்காணிக்கும் மிக முக்கியத் துறை.</p><p><br></p><p><b><font color="#104a5a">தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர்:</font></b></p><p>தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது, சமூகத்தின் முக்கிய அங்கங்களான மகளிர், இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் சார்ந்த துறைகளைத் தனது நேரடிப் பார்வையிலேயே வைத்திருப்பேன் என்று விஜய் குறிப்பிட்டிருந்தார். அதன்படியே, தற்போதைய அமைச்சரவை ஒதுக்கீட்டில் அந்தத் துறைகள் அனைத்தையும் தன் வசம் எடுத்துக்கொண்டுள்ளார்.</p><p><br></p><p><b><font color="#311873">சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் முக்கியத்துவம்:</font></b></p><p>கடந்த ஆட்சியில் துணை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருந்த 'சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை' தற்போது முதல்வர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. தமிழக வரலாற்றில், அரசின் பல்வேறு துறைகளின் கீழ் வரும் பிரத்யேக திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், அவற்றின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் இத்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் மூலம், தமிழக அரசின் புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் அனைத்தையும் முதல்வரே நேரடியாகக் கண்காணித்து வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>