உத்தரபிரதேசத்தில் பசுவதை, கால்நடைகள் கடத்தலை வெற்றிகரமாக தடுக்கிறோம் - முதல் அமைச்சா் யோகி ஆதித்யநாத்
நிருபர்
November 22, 2020
உத்தரபிரதேசத்தில் பசுவதை, கால்நடைகள் கடத்தலை வெற்றிகரமாக தடுக்கிறோம் - முதல் அமைச்சா் யோகி ஆதித்யநாத்|Vilasal News
<p><b>உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவதை மற்றும் கால்நடைகள் கடத்தலை தனது அரசு வெற்றிகரமாக தடுத்து வருவதாக முதல் அமைச்சா் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.</b><br></p><p>லக்னோவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசுகையில், “நான் உத்தரப்பிரதேச முதல்-மந்திரியாக பொறுப்பேற்பதற்கு முன்பு பசுக்கள் மற்ற நாடுகளுக்கு கடத்தப்பட்டன. இந்த புனித விலங்கை பாதுகாப்பது எனக்கு சவாலாக இருந்தது. <br></p><p>நான் எனது முழு திறனையும் செலுத்தி இதனை சாத்தியமாக்கி உள்ளேன். பசுவதை மற்றும் கால்நடைகள் கடத்தலை எங்களால் வெற்றிகரமாக தடுக்க முடிகிறது. அரசு சார்பில் நடத்தப்படும் கோசாலைகளில் 5 லட்சத்து 24 ஆயிரம் பசுக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.<br></p>