தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் விறுவிறுப்பு!
நிருபர்
April 09, 2026
தூத்துக்குடி தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளிடையே நிலவும் 4 முனைப் போட்டிகளுக்கு நடுவே அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தேர்தல் பரப்புரை விறுவிறுப்படைந்துள்ளது.
<p><b>தூத்துக்குடி தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளிடையே நிலவும் 4 முனைப் போட்டிகளுக்கு நடுவே அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தேர்தல் பரப்புரை விறுவிறுப்படைந்துள்ளது.</b></p><p><br></p><p>தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, போல்பேட்டை, குறிஞ்சி நகர், தனசேகரன் நகர், காசிராஜன் நகர், செல்வ விநாயகபுரம், நந்தகோபாலபுரம், TMC காலனி, அழகேசபுரம், நடராஜ புரம், சுந்தரராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று ( ஏப்ரல் 9,2026 ) மாலை விறுவிறுப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.</p><p><br></p><p>அப்போது, அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன், திமுக அரசின் மீதான விமர்சனங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். “கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. மக்களின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்த பொற்கால திட்டங்கள் மீண்டும் கிடைக்க எனக்கு வாக்களியுங்கள்” என பிரச்சாரம் செய்தார்.</p><div><br></div>