<p><b>மகளிருக்கு கோடை கால சிறப்புத் தொகையாக இந்த ஆண்டு மட்டும் ரூ.2000 வழங்கப்பட்டது ஏன்? என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.</b></p><p><br></p><p>அதற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்தார். அவர், இனி எல்லா ஆண்டுகளிலும் கோடை கால சிறப்புத் தொகையாக மகளிருக்கு ரூ.2,000 வழங்கப்படும் என தெரிவித்தார்.</p><p><br></p><p>கோடை காலம் வரவுள்ளதால், வெயில் தாக்கத்தால் மக்களுக்கு மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், இந்த கோடைகால சிறப்பு தொகை வழங்கப்படுவதாக விளக்கமளித்துள்ளார். இது பெண்களிடம் கவனம் பெற்றுள்ளது.</p>