<p><b>ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பிடாரம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய கலையரங்குகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.</b></p><p><br></p><p>கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேல லெட்சுமிபுரம் கிராமத்திற்கும், மேட்டூர் கிராமத்திற்கும்&nbsp; தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்&nbsp; கட்டப்பட்ட புதிய கலையரங்கத்தை&nbsp; எம்.எல்.ஏ சண்முகையா ரிப்பன் வெட்டித் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். இந்தத் திறப்பு விழாவில் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p><p><br></p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2026/02/10/11770721783.jpg" style="width: 100%;"><br></p><p><br></p><p>நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகவள்ளி, உதவி பொறியாளர் செல்வபாக்கியம், கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ், ஊராட்சி செயலர் ராமலிங்கம், அரசு ஒப்பந்ததாரர் முருகன், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த&nbsp; கல்யாணராஜ், கனகராஜ், தெற்கு ஆவராங்காடு&nbsp; கிருஷ்ணசாமி மற்றும்&nbsp; நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.</p><p><br></p><p>புதிய கலையரங்கம் கட்டித் தரப்பட்டதற்காக அந்தந்த கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினருக்குத் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.</p>