<p><b>தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், பணியின் போது மது அருந்தி ஒழுங்கீனமாகச் செயல்பட்ட 3 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.</b></p><p><b><font color="#9c0000"><br></font></b></p><p><b><font color="#9c0000">நடவடிக்கைக்குள்ளான காவலர்கள்:</font></b></p><p>உலகநாதன் – சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (குளத்தூர் காவல் நிலையம்)</p><p>அண்ணாத்துரை – போலீஸ் ஏட்டு (ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம்)</p><p>தனுஷ்கோடி – போலீஸ் ஏட்டு (முத்தையாபுரம் காவல் நிலையம்)</p><p><br></p><p>சம்பந்தப்பட்ட மூன்று காவலர்களும் பணியில் இருந்தபோது மதுபோதையில் இருந்ததாக எஸ்பி-க்கு புகார்கள் வந்தன.எஸ்பி உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது.முதற்கட்ட நடவடிக்கையாக  அவர்கள் மூவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.</p><p><br></p><p>துறை ரீதியான விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தற்போது மூவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.</p><p><br></p><p> "காவலர்கள் பணியின் போது மிகுந்த பொறுப்புடனும், எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிக்காத வகையிலும் செயல்பட வேண்டும்" என எஸ்பி சிலம்பரசன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>