<p><b>தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இளம்பெண் ஒருவர் திடீரென மாயமானதைத் தொடர்ந்து அதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்</b>.&nbsp;<br></p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள&nbsp; கழுகுமலை&nbsp; அமல்ராஜ் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் மகாலெட்சுமி (16), இவர் கடந்த 07.03.2021 (ஞாயிற்று கிழமை) அன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். </p><p>அதன் பின்னர், வெகு நேரமாகியும் அப்பெண் திரும்பவில்லை. இதனையடுத்து, அப்பெண்ணின் குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தும்&nbsp; அவரைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. </p><p>இதனையடுத்து, இதுகுறித்து கழுகுமலை காவல் நிலையத்தில் அப்பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்<br></p>