சீனா வழியாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் தூத்துக்குடி இளைஞர்!
நிருபர்
January 14, 2026
சீனா வழியாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் தூத்துக்குடி இளைஞர் வெங்கட சுப்பிரமணியன் நல்லசாமிக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
<p><b>சீனா வழியாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் தூத்துக்குடி இளைஞர் வெங்கட சுப்பிரமணியன் நல்லசாமிக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன் நல்லசாமி (26). பட்டதாரியான இவர் உலகின் உயரமான 3 சிகரங்களை ஏறி சாதனை படைத்துள்ளார்.</p><p><br></p><p>ஏற்கெனவே ஐரோப்பாவின் உயரமான சிகரமான மவுன்ட் எல்ப்ரஸ் (5,642 மீட்டர்), தென்அமெரிக்காவின் உயரமான சிகரமான மவுன்ட் அக்கோன்காகுவா (6,961 மீ.), ஆப்பிரிக்காவின் உயரமான சிகரமான மவுன்ட் கிளிமஞ்சாரோ (5,895 மீ.) ஆகியவற்றில் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ள அவர், உலகின் 7 கண்டங்களின் மிக உயரமான சிகரங்களை தொடுவது என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறார்.</p><p><br></p><p>அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மலை ஏறுதல் பயிற்சி நிறுவனத்தில், மலைஏறுதல் பயிற்சியை முடித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இதுவரை எவரெஸ்ட் சிகரத்தை நேபாளம் வழியாக ஏறி சாதனை படைத்துள்ளனர்.</p><p><br></p><p>தற்போது, வெங்கட சுப்பிரமணியன் நல்லசாமி புதிய முயற்சியாக வரும் ஏப்ரல் 2-ம் தேதி சீனா வழியாகப் பயணித்து எவரெஸ்ட் சிகரத்தை அடையத் திட்டமிட்டுள்ளார்.</p><p><br></p><p>இந்த மலையேற்றப் பாதைவழியாக எவரெஸ்ட் சிகரத்துக்குச் செல்லும் முதல் தமிழக வீரர் என்ற பெருமை வெங்கட சுப்பிரமணியன் நல்லசாமிக்கு கிடைத்துள்ளது.</p><p><br></p><p>அவரை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அழைத்துப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். இளைஞர் வெங்கட சுப்பிரமணியன் நல்லசாமியின் புதிய சாதனை வெற்றிபெற வேண்டும், மேலும் அவர் பல சாதனைகளை புரிய வேண்டும் என்று அமைச்சர் வாழ்த்தினார்.</p>