<p><b>தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா காலபைரவர் மிகப்பிரம்மாண்டமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.</b></p><p><b><br></b></p><p>காலபைரவருக்கு மாதம் தோறும் அமாவாசை, தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.</p><p><br></p><p>ஜப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மஹா காலபைரவருக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர், புனுகு அபிஷேகம் நடைபெற்றது.</p><p><br></p><p>அதனைத்தொடர்ந்து மஹா காலபைவரவர் மலர்களாலான சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது.</p><p><br></p><p>தொடர்ந்து, பக்தர்கள் வாழ்வில் கடன்தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் நீங்கிடவும், செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஹா யாகத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. முடிவில், பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது.</p><p><br></p><p>இதற்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.</p>