மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த ஓபிஎஸ் மகன் ஜெய பிரதீப் : சட்டமன்ற தேர்தலில் போட்டியா?
நிருபர்
March 08, 2021
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த ஓபிஎஸ் மகன் ஜெய பிரதீப் : சட்டமன்ற தேர்தலில் போட்டியா?
<p><b>தமிழக துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப் பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெய பிரதீப் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்</b>.<br></p><p>தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கம்பம் சட்டமன்ற தொகுதியில் ஜெய பிரதீப் போட்டியிட உள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/03/08/11615201857.jpg" style="width: 100%;"><br></p><p> </p><p>இதுவரை ஆன்மீக செம்மல் பட்டத்துடன் மேல் மட்ட அரசியல் செய்து கொண்டிருந்த ஜெய பிரதீப் இனி அரசியல் களத்தில் நேரடியாக இயங்கிட உள்ளார். </p><p>இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதல் தான், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் திடீர் சிறப்பு தரிசனம் என காரணம் சொல்லப்படுகிறது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/03/08/11615201972.jpg" style="width: 100%;"><br></p><p>மேலும், அரசு தொடர்பான உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் மரியாதையை கோவில் அரசு நிர்வாகிகள், காவல்துறையினர் அவருக்கு கொடுத்துள்ள விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p>