விளாத்திகுளம் வரும் எடப்பாடி பழனிசாமி... வரவேற்பு பணியில் வேகம் காட்டும் மணியகாரன்பட்டி விஜயகுமார்!
நிருபர்
July 30, 2025
2026 சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற பிரச்சார பயணம் மூலம் விளாத்திகுளம் வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் பணியில் புதூர் கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், கம்பத்துப்பட்
<p><b>2026 சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற பிரச்சார பயணம் மூலம் விளாத்திகுளம் வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் பணியில் புதூர் கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், கம்பத்துப்பட்டி கூட்டுறவு சங்க தலைவருமான மணியகாரன்பட்டி விஜயகுமார் வேகம் காட்டி வருகிறார்.</b></p><p><br></p><p>அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் நாளை ஜூலை 31 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகைதர உள்ளார். அன்றைய தினம் இரவு விளாத்திகுளத்தில் அவர் மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். </p><p><br></p><p>இந்நிலையில், நாளை ஜூலை 31 ல் தேதி விளாத்திகுளத்தில் மக்களை சந்தித்து பிரச்சார பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் பணியில் அதிமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆலோசனையின் பேரில், விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் வழிகாட்டுதல் படி, புதூர் கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், கம்பத்துப்பட்டி கூட்டுறவு சங்க தலைவருமான மணியகாரன்பட்டி விஜயகுமார் வரவேற்பு பதாகைகளை வைத்தல், பொதுமக்களுக்கு அழைப்பு கொடுத்தல் என எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் பணியில் வேகம் காட்டி வருகிறார்.</p>