<p dir="ltr">பாலியல் புகாருக்கு ஆளான தமிழக டிஜிபி ராஜேஷ்தாஸை கைது செய்யவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தூத்துக்குடி&nbsp; மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்பார்ட்டத்தில் ஈடுபட்டனர்.<br></p><p dir="ltr">அதனைத்தொடர்ந்து,&nbsp; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது : </p><p dir="ltr">தமிழக டிஜிபி ராஜேஷ்தாஸ் அவர்கள் பெண் எஸ்பி அவர்களை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து புகார் கொடுக்க போன அவரை செங்கல்பட்டு எஸ்பி<u> கண்ணன் தடுத்துள்ளார்.</u></p><p dir="ltr">இத்தகைய பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி ராஜே<u>ஸ்</u> தாஸ் மற்றும் புகார் கொடுக்க விடாமல் தடுத்த கண்ணன் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p> </p><p dir="ltr">இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் பூமயில், மாவட்ட தலைவர் விஜயலெட்சுமி, மாவட்ட பொருளாளர் ராமலெட்சுமி, மாவட்ட துணைச் செயலாளர் கலைச்செல்வி, மற்றும் உலகமணி, செல்வி, கவிதா, சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.<br> </p>