<p><b>தூத்துக்குடி புதிய துறைமுகத்திலிருந்து கேம்ப் 1 வழியாக முத்துநகர் சந்திப்பு புதிய பாலம் கட்டுமிடத்தில்&nbsp; அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.</b></p><p><br></p><p>அப்போது மர்மநபர் கல்வீசி தாக்கியதில் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இது குறித்த புகாரின் பேரில் தெர்மல் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.</p><p><br></p><p>இதில் கல் எறிந்தவர் மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.</p>