<p><b>பெட்ரோல் டீசல் விலை குறைக்க இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது</b>.<br></p><p>பெட்ரோல் டீசல் விலை கடந்த 15 நாட்களாக உயர்ந்து 100 ரூபாயை நோக்கி வெற்றி நடைபோட்டு கொண்டு இருக்கிறது. இதனால் அதன் வரிசுமையை குறைக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.<br></p><p>பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்குக்கு மத்திய அரசு அறிவித்து வந்த நிலையில், கொரோனா மீட்பு நடவடிக்கையாக வரிகள் உயர்த்தப்பட்டதால் விலை கடுமையாக ஏறியது. பெட்ரோல், டீசல் விலையில் 60சதவீத தொகை அதன் வரிகளுக்கே போய்விடுகிறது.</p><p>இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் மத்திய நிதியமைச்சகம் ஆலோசையில் ஈடுபட்டுள்ளது. விரைவில் வரி குறைப்பு மூலமாக பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும்&nbsp; என்று தகவல் வெளியாகியுள்ளது</p>