<p><b>அதிமுகவிற்கு கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிசாமி என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்</b></p><p><b><font color="#295218"><br></font></b></p><p><b><font color="#295218">அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்:-</font></b></p><p><br></p><p>எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவை மீட்டெடுத்து இயக்கத்தை காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.</p><p><br></p><p>களத்தில் மக்களை சந்தித்து உண்மையை எடுத்துச் செல்வோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டுவர அயராது உழைப்பவர் எடப்பாடி பழனிசாமி.</p><p><br></p><p>மக்கள் சக்திதான் ஒரு இயக்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். அந்த சக்தியை அதிமுக பெற்றுள்ளது. அதிமுக வுக்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்தி விடமுடியாது. விவேகத்துடன் செயல்பட்டு 4 ஆண்டுகள் முழு ஆட்சியையும் சிறப்பாக நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2025/02/13/11739429527.jpg" style="width: 100%;"><br></p><p>அதிமுகவுக்கு வரும் சோதனைகளை தொண்டர்கள் மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். எதிரிகள் மற்றும் துரோகிகளின் வாதங்களால் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது. என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.</p>