கோவில்பட்டியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்.
நிருபர்
February 20, 2021
கோவில்பட்டியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்.
<p><b>கோவில்பட்டியில் நடைபெற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்</b>.<br></p><p>கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் வைத்து, கோவில்பட்டி சட்டமன்ற தொதிக்குட்பட்ட, கோவில்பட்டி வட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/02/20/11613806891.jpg" title="Vilasal news" style="width: 100%;"><br></p><p>மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் வரவேற்புரையாற்றினார், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.<br></p><p>விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு, சுமார் 6.73 கோடி மதிப்பீட்டில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.<br></p>