<p><b>தென்காசி மாவட்டம், மேல மருதப்புரம்&nbsp; ரெட்டி இளைஞர் மன மகிழ் மன்றத்தின் சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 43ஆம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது.&nbsp;</b></p><p><br></p><p>இந்த கபடி போட்டியை, தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் உட்லண்ட்ஸ் ரவி தலைமையில், மாநில துணை தலைவர்&nbsp; RSR, மாநிலச் செயலாளர் ராஜா பூர்ணசந்திரன், மாநில பொருளாளர் அருண்குமார், இளைஞர் அணி மாநில செயலாளர் மணிகண்டன்&nbsp; ஆகியோர் துவக்கி வைத்தனர்.&nbsp;</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2025/01/16/11737021765.jpg" style="width: 100%;"><br></p><p>இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ரெட்டி நலச்சங்க பொருளாளர்&nbsp; ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட ரெட்டி நலச்சங்கத்தின் தலைவர் பெத்துராஜ், செயலாளர் ராஜகோபால், விளாத்திகுளம் வசந்தம் ஜெயக்குமார்&nbsp; மற்றும் மாநில, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் இவ்விழாவின் தலைவர் முருகன், செயலாளர் பழனி வேல் முருகன், பொருளாளர் ரமேஷ் குமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு கபடி போட்டியை கண்டுகளித்தனர்.</p>