<p><b>உரிய அனுமதியின்றியும், சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடும் ஸ்பா, மசாஜ் சென்டர்கள் மற்றும் அழகு நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் இன்று காலை நடந்தது. கூட்டம் தொடங்கியது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.&nbsp;</p><p><br></p><p>பின்னர் கூட்டத்தில், <b>"51 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், எதிர்கட்சி மாமன்ற கொறடாவுமான அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசுகையில்":-</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாநகராட்சி 6 வது தீர்மானம் தொழில் உரிமம் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிடக்கோரி அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை பதிவை செய்கிறேன். மேலும், தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல்&nbsp; ஸ்பாக்கள், பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர்கள் இயங்குவதோடு, அங்கு பல்வேறு சமூக விரோத செயல் நடைபெறுகிறது. ஆகவே, அதனை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><br></p><p>தூத்துக்குடி மாநகராட்சி 51வது வார்டு பகுதியில் மழை நீர் பாதிக்காத வண்ணம் மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை வைத்தார்.</p><p><br></p><p>இதற்கு பதில் அளித்து <b>மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்:-&nbsp;</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உரிய அனுமதியின்றியும், சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடும் ஸ்பா, மசாஜ் சென்டர்கள் மற்றும் அழகு நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.</p>