<p><b>தூத்துக்குடி 'ஸ்பா' சென்டரில் பாலியல் தொழில் நடத்தியதாக உரிமையாளர், மேலாளர் கைது செய்யப்பட்டனர். மேலும், அங்கிருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.</b></p><p><br></p><p>தூத்துக்குடி டவுன் பகுதியில் "ஸ்பா" சென்டரில் பாலியல் தொழில் நடந்து வருவதாக டவுன் ஏஎஸ்பி மதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தென்பாகம் போலீசார், பிரையன்ட் நகர் 4 வது தெருவில் உள்ள ஒரு ஸ்பா சென்டரில் சோதனை நடத்தினர். அங்கு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது.&nbsp;</p><p><br></p><p>இது தொடர்பாக ஸ்பா சென்டரை நடத்திய சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மஞ்சக்கல்பட்டியைச் சேர்ந்த சிங்காரம் மகன் விக்னேஷ் (30) மற்றும் அதன் மேலாளர் சங்ககிரியைச் சேர்ந்த மணி மகன் கோபால் (24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை, தென்காசியைச் சேர்ந்த 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.&nbsp;</p>