<p><b>தமிழக வேலைவாய்ப்பினை வடமாநிலத்தவர்களுக்கு வழங்கிய மத்திய,மாநில அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது</b>.<br></p><p>தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகள் அனைத்தும்&nbsp; வடமாநிலத்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மத்திய அரசு என். எல். சியில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு&nbsp; பெரும் அநீதி இலைக்கப்பட்டதாகவும், பொறியாளர்(GET) தேர்வை ரத்து செய்ய வேண்டும் என&nbsp; விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மத்திய மாவட்ட செயலாளர் கா.அகமது இக்பால் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.<br></p><p>இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களிலும், ரயில்வே துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தவர்கள் திட்டமிட்டே புகுத்தப்படுவதை நிறுத்தவேண்டும் எனவும், தமிழர் உரிமைகளை மீட்டெடுக்க வீறுகொண்டு எழுவோம் எனவும்,தமிழகத்தின் வளங்களை சுரண்டுவதை வேலைவாய்ப்புகளை களவாடுவதை அனுமதிக்க மாட்டோம் என கோஷங்களை எழுப்பபட்டது.</p><p>ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் சுலைமான், ஓட்டப்பிடரம் தொகுதி செயலாளர் ராமசந்திரன்,இஸ்லாமிய ஜனநாயக பேரவை முத்தலிப், வட்ட செயலாளர் முகமது,காயப்பட்டினம் நகர செயலாளர் அல் அமின், மற்றும் நிர்வாகிகள், பலர் ஈடுபட்டனர்.<br></p>