<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கவும்,&nbsp; &nbsp;தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு&nbsp; செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும்&nbsp; எச்சரிக்கப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.<br></b></p><p><br></p><p>திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு அதிகப்படியான மழை நீர் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டிற்கு சுமார் 60000 கன அடி நீர் இன்று (13.12.2024)&nbsp; வந்து கொண்டிருப்பதாலும்,&nbsp; கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும்,&nbsp; மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள்,&nbsp; கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர&nbsp; கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கவும்,&nbsp; &nbsp;தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு&nbsp; செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும்&nbsp; எச்சரிக்கப்படுகிறார்கள்.&nbsp;</p><p><br></p><p>மேலும், மாவட்டத்தின் மழை நீர் தேங்கியுள்ள இதர தாழ்வான&nbsp; பகுதிகளில் வசிக்கும் மக்களும் தங்களுக்கு அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு வந்து பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்.</p><p><br></p><p>மேலும், மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளிலும் வெள்ள நீர்வரத்து மிகவும் உன்னிப்பாக அனைத்து நிலை அலுவலர்களாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர்&nbsp; இளம்பகவத் தெரிவித்துள்ளார்.</p>