தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் விவகாரம் : டெல்லி பாராளுமன்றத்தில் எழுந்த கேள்வி!
நிருபர்
December 07, 2024
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வெளிவட்ட சரக்குப் பெட்டக முனையத்தின் திட்டப் பணிகளை தொடங்காதது ஏன்? என்று இந்திய மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
<p><b>தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வெளிவட்ட சரக்குப் பெட்டக முனையத்தின் திட்டப் பணிகளை தொடங்காதது ஏன்? என்று இந்திய மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். </b></p><p><br></p><p>மக்களவையில், மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சகத்திடம், திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் மத்திய சென்னை எம்பியுமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வி</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/12/07/11733549472.jpg" style="width: 100%;"><br></p><p>தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வெளிவட்ட சரக்குப் பெட்டக முனையத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?</p><p><br></p><p>திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்கள் ஆன நிலையில், அதன் பணிகள் எப்போது தொடங்கி, எப்போது நிறைவடையும் என்ற கால வரையறையுடன் தெரியப்படுத்தவும்.</p><p><br></p><p>வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதியின் முக்கிய சரக்கு மாற்று மையமாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்லது முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் என்ன?</p><p><br></p><p>வ.உ.சி. துறைமுகப் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி வசதியின் தற்போதைய நிலை என்ன? மேலும் அத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் எந்தளவு பயன்படுத்தப்பட்டுள்ளது?</p><p><br></p><p>தேசிய அனல் மின் கழகம் தூத்துக்குடி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி வசதிக்கான பணிகளைத் தொடங்கிவிட்டதா?</p><p><br></p><p>நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் வெளிவட்ட துறைமுக சரக்குப் பெட்டக முனையம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி வசதி போன்ற பெரிய திட்டங்களால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை கண்காணிக்கவும் அவற்றை குறைக்கவும் ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன? எனவும் கேள்வி எழுப்பினார்.</p>