ஒட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் : சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்!
நிருபர்
September 19, 2024
ஒட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் : சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்!
<p><b>ஒட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.</b><br></p><p><br></p><p>இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, வட்டார கல்வி அலுவலர்கள் பவனந்தீஸ்வரன், மகாலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், உதவி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், திமுக மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, நகர செயலாளர் பச்சைப்பெருமாள், கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், முறம்பன் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சுடலைமணி, ஒன்றிய திமுக தொண்டரணி அமைப்பாளர் கோபால், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>