ஓட்டப்பிடாரம் பஜாரில் சுகாதாரத்துறையினர் அதிரடி ரெய்டு - காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம்!
நிருபர்
July 12, 2024
ஓட்டப்பிடாரம் பஜாரில் சுகாதாரத்துறையினர் அதிரடி ரெய்டு - காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம்!
<p><b>ஓட்டப்பிடாரம் பஜாரில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர், காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர்.</b><br></p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/07/12/21720775546.jpg" style="width: 100%;"><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம் பஜார் பகுதியில் உள்ள டீக்கடை, பலசரக்கு கடை, ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட கடைகளில் இன்று காலையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம், மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர் முருகராஜ் , சுகாதார ஆய்வாளர்கள் தேவசுந்தரம், காளிமுத்து, மானக்சா அருணாச்சலம், கங்காதர் ஆகியோர் கொண்ட குழுவினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/07/12/31720775547.jpg" style="width: 100%;"><br></p><p>அப்போது, காலாவதியான உணவு பொருள்கள் மற்றும் கேரி பேக்குகள் வைத்திருந்த 6 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/07/12/11720775546.jpg" style="width: 100%;"><br></p>