<p><b>மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சாத்தான்குளத்தில் வழக்கறிஞர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணித்து நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.</b><br></p><p>போராட்டத்திற்கு மூத்த வழக்கறிஞர் சிவபாலன் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் முருகானந்தம், மணிமாறன், சுடலைமுத்து, சிவா, வேணுகோபால், ஈஸ்டர்கமல், கணேஷ், கோபாலகிருஷ்ணன், சிவமீனா, ஸ்வீட்டி, ஜேம்ஸ்துரை,&nbsp; முத்து கணேஷ், ரோஸ்லின்,&nbsp; பால வினிதா, வினோத், ஷில்பா பிரேம்குமார்,&nbsp; வசந்த் குமார்,&nbsp; ஹாரிஸ் உள்ளிட்ட பலர்&nbsp; கலந்து கொண்டனர்.</p>