<p><b>ஓட்டப்பிடாரம் அருகே அக்கநாயக்கன்பட்டியில் தடுப்பணை அமைக்கும் பணிகளை யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்</b>.</p><p>தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே அக்காநாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக அங்குள்ள புதுக்குளம் நிரம்பி குளத்தின் கரை முற்றிலுமாக உடைந்து சுற்றியுள்ள கிராமங்களில் மழை நீர் புகுந்து அதிகமான பாதிப்புகளை உண்டாக்கியது.&nbsp;</p><p>இதனையடுத்து குளத்தின் கரையை சீரமைத்து தர வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் முயற்சியின் பெயரில்&nbsp; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதுக்குளத்தின் கரையை பலப்படுத்தி தடுப்பணை அமைக்கும் பணிகளை ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/07/03/11719989753.jpg" style="width: 100%;"><br></p><p>இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, உதவி பொறியாளர் பாலநமச்சிவாயம், பணி மேற்பார்வையாளர் சங்கர், வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலர் நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அய்யாதுரை, அருண்குமார் மாடசாமி, துணைத் தலைவர் மகாலட்சுமி,</p><p>ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் ராமலட்சுமி, மகளிரணி நித்யா, இளைஞரணி மகேஷ், சந்தனகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>