<p>கோவில்பட்டி வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாக நடமாடிக் கொண்டிருக்கும் நாய்கள் மற்றும் மாடுகளை அப்புறப்படுத்த கூறி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக நகராட்சி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது.</p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் போக்குவரத்துக்கு இடையூராகவும், விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாகவும் நடமாடும் மாடுகள் மற்றும் நாய்களை அப்புறப்படுத்துக்கோரி, இன்று கோவில்பட்டி நகராட்சி ஆணையரிடம் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தலைவர் தமிழரசன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/07/02/11719903036.jpg" style="width: 100%;"><br></p><p>இதில், செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>