தூத்துக்குடியில் மனைவி - மகள் காணவில்லை : கணவர் போலீசில் புகார்!
நிருபர்
June 29, 2024
தூத்துக்குடியில் மனைவி - மகள் காணவில்லை : கணவர் போலீசில் புகார்!
<p>தூத்துக்குடியில் அம்மா - மகள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>தூத்துக்குடி ராஜபாண்டி நகரைச் சேர்ந்தவர் சூசைராஜ். இவரது மனைவி பிரியங்கா (42). இந்த தம்பதிக்கு 17 வயதில் பிளஸ் டூ படிக்கும் ஒரு மகள் இருக்கிறார். கடந்த 26 ஆம் தேதி பிரியங்கா தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, மனைவி மகளை காணாத குறித்து சூசை ராஜ் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>