<p><b>நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பிள்ளாநல்லூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூட்டுறவு துறை சார்பில் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்புடன் இரத்த தான முகாம் நடைபெற்றது.</b></p><p>இம்முகாமினை கூட்டுறவு துறை இணை பதிவாளர் அருளரசு&nbsp; தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பணியாளர்கள் பலர் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு&nbsp; 45 யூனிட் இரத்த தானம் வழங்கினார்கள். இரத்த கொடையாளர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/05/22/11716366223.jpg" style="width: 100%;"><br></p><p>இம்முகாமில் துணை பதிவாளர் நாகராஜன், ரெட்கிராஸ் செயலர் இராஜேஸ் கண்ணன், அரசு இரத்த வங்கி மருத்துவர் அன்பு மலர், பிள்ளாநல்லூர் மருத்துவ அலுவலர் செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>