<p><b>இலங்கை நாட்டுக்கு கொரோனா தடுப்பூசியின் 5 லட்சம் டோஸ்களை இந்தியா பரிசாக அனுப்பியது. இதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.</b><br></p><p>இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த மாதம் 3-ந் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>இந்த தடுப்பூசிகளை போடும் மிகப்பெரிய பணி இந்தியாவில் தொடங்கியுள்ள நிலையில் உலகின் பல நாடுகள், இந்தியாவை தடுப்பூசிகளுக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.</p><p>நேபாளம், வங்க தேசம், மியான்மர், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஒரு வாரத்தில் 55 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா பரிசாக அளித்துள்ளது.</p><p>இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி, கொழும்புவுக்கு நேற்று வந்து சேர்ந்தது. இதனைப் பெற்றுக் கொண்டதும், இலங்கை அதிபர் ராஜபக்சே டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/01/29/11611883647.jpg" style="width: 100%;"><br></p><p>‘இந்தியா மக்கள் அனுப்பிய கோவிட் - 19ன் தடுப்பூசியின் 5 லட்சம் டோஸ்களை பெற்றுக் கொண்டோம். இந்த சோதனையான காலத்தில் இலங்கை மக்களுக்கு நீங்கள் காட்டிய அன்பான பெருந்தன்மைக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.</p>