திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்கதர்கள் கூட்டம்
நிருபர்
January 28, 2021
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தைப்பூசம் அலை அலையாக திரண்ட பக்தர்கள்
<p dir="ltr"><b>திருச்செந்தூரில் </b><b>”தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.</b></p><p dir="ltr">முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2 வது படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணியர் இக்கோவிலில் வருடந் தோறும் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும்.</p><p dir="ltr">இதில் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூச திருவிழா இத்திருவிழாவானது இன்று <a href="tel:28012021">28.01.2021</a> (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இன்று அதிகாலை 3மணிக்கு நடை திறந்து 3.40 மணிக்கு விஸ்வ ரூப தீபாராதனையும், 6மணி அளவில் உதயமார்தாண்ட அபிஷேகமும் நடந்தது.</p><p dir="ltr"><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/01/28/11611799579.jpg" title="Vilasal news" style="width: 100%;"><br></p><p>
</p><p dir="ltr"> 8.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 10 மணிக்கு உச்சி கால அபிஷேகமும் நடக்க இருக்கிறது. </p><p dir="ltr">பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும்,அழகு குத்தியும், பாத யாத்திரையாகவும் வந்து சாமி தரிசனம் செய்தனர். </p>